டிச.9 வரை ஜாக்டோ ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு - சுப்பிரமணி

டிச.9 வரை ஜாக்டோ ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு - சுப்பிரமணி
x
டிசம்பர் 4 ஆம் தேதி முதல் அறிவித்திருந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது. 
போராட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள், மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தியதை அடுத்து, இந்த முடிவை ஜாக்டோ ஜியோ எடுத்துள்ளது. இதையடுத்து, கடந்த ஆண்டு அரசு அறிவித்த உத்தரவை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஒரு நபர் குழு பரிந்துரையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்