தமிழக கடலோர பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழக கடலோர பகுதியில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழக கடலோர பகுதியில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன், தமிழகம் முழுவதும் அடுத்த 3 தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும், "மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
Next Story