குழந்தைகளுடன் கேக் வெட்டி மகிழ்ந்த ஆட்சியர் ரோகிணி

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
குழந்தைகளுடன் கேக் வெட்டி மகிழ்ந்த ஆட்சியர் ரோகிணி
x
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பாக நடந்த இந்த விழாவில் மனவளர்ச்சி குன்றிய செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறைந்த 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் பங்கேற்றனர். விழாவில் 15 கிலோ எடையுள்ள பெரிய கேக் வெட்டி, குழந்தைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்