ஓடும் ரயிலில் கொள்ளை சம்பவம் : மத்திய பிரதேசத்தில் தமிழக போலீசார் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை

ரயிலில் 5 கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கு விசாரணைக்காக மத்திய பிரதேசம் சென்றுள்ள தமிழக போலீசார் மீது தாக்குதல் நடைபெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓடும் ரயிலில் கொள்ளை சம்பவம் : மத்திய பிரதேசத்தில் தமிழக போலீசார் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை
x
சேலம் - சென்னை ரயிலில் 5 கோடியே 78 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மொகர் சிங் உள்ளிட்ட 7 பேரை, சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை கைது செய்ய மத்திய பிரதேசத்தில் போலீசார் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையே, மற்றொரு கொள்ளை வழக்கு தொடர்பாக, மொகர் சிங்கின் சொந்த கிராமத்துக்கு மத்திய பிரதேச போலீசார் சென்றபோது, அவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. தமிழக போலீசார் என நினைத்து இந்த தாக்குதல் நடந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் அதே பகுதியில் தங்கியுள்ள சிபிசிஐடி போலீசார் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை உயர் அதிகாரிகள் தொடர்பு கொண்டு பாதுகாப்பாக இருப்பதை உறு​தி செய்தனர். மேலும், கொள்ளையடித்த பணத்தில்   சொந்த ஊரில், கொள்ளையர்கள் வாங்கிய சொத்து குறித்த ஆவணங்களையும் சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்