தவறான தொடர்பு காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை : கொலையாளிகளை தேடும் போலீஸ்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தவறான தொடர்பு காரணமாக இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தவறான தொடர்பு காரணமாக இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேம் குமார் என்பவர் கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற பெண்ணிடம் தவறான தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சூர்யாவின் கணவர் பிரகாஷ் தனது சகோதரருடன் சேர்ந்து, பிரேம் குமாரை அறிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தலை மறைவானார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளிகள் இருவரையும் தேடி வருகின்றனர்.
Next Story