ஆணவக் கொலைகள் : சமூக ஊடகங்கள் வளர்ச்சியால் தடுக்க முடியவில்லை - திருமாவளவன்

ஆணவக் கொலைகள் : சமூக ஊடகங்கள் வளர்ச்சியால் தடுக்க முடியவில்லை - திருமாவளவன்
x
ஆணவ படுகொலை செய்யப்பட்ட நந்தீஷ் மற்றும் ஸ்வாதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு  அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில்   நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், நாட்டில் சாதி வெறியர்களுக்கு எதிராக தனித்தனியாக குரல் கொடுத்துக் கொண்டிருந்த நாம், பல ஆண்டு கால  போராட்டத்திற்கு  பின்னர் தற்போது தான் இணைந்து குரல் கொடுக்க தொடங்கி உள்ளதாக தெரிவித்தார். சாதியத்தை வேரறுக்கும் வரை அனைவரும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்