தென்னை : சீரமைப்பு எப்படி..?

கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களை மறுசீரமைப்பதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து ஒரு தொகுப்பு..
x
கஜா புயல் தாக்கிய பகுதிகளில் 1 முதல் 3  வயதுள்ள  தென்னங்கன்றுகள் எந்த பாதிப்பும் இல்லாமல் சாய்வாக இருந்தால் அதனை முட்டு கொடுத்து நிலைநிறுத்தலாம். வடிகால் வசதி மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகளை கையாண்டு பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை மீட்கலாம். பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு ஒரு மாதத்திற்கு 1.3 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட்,  மூன்றரை கிலோ மியூரியேட் ஆப் பொட்டாஷ், 

1 கிலோ ஜிப்சம், 50 கிலோ மக்கிய உரம், 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு உள்ளிட்டவற்றை ஒருங்கிணைந்த உரமாக இடவேண்டும். பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு தென்னை டானிக் 200மில்லி வீதம் 6 மாத இடைவெளியில் தொடர்ந்து 2 வருடங்களுக்கு வேர் மூலம் செலுத்த வேண்டும்.பசுந்தாழ் உரங்களான சணப்பை, களப்பகோனியம், அகத்தி ஆகியவற்றை தென்னந்தோப்பில் பூக்கும் பருவத்தில் உழுது மண்ணின் வளத்தை மேம்படுத்தலாம் தென்னை மரங்களில் சாறு வடியும் பகுதிகளில் பூசாண தாக்குதலை கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸி குளோரைடு பசை பூசலாம். சாறு வடிதலை கட்டுப்படுத்த வேர் மூலம் ஹெக்ஸகோனசால் மருந்தினை  தண்ணீரில் கலந்து 3 முறை 3 மாத இடைவெளியில் மரத்தில் செலுத்தலாம். புயல் தாக்குதலால் சேதமான தென்னை மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். தோப்புகளில் குப்பை இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் தென்னங்கன்றுகள் வைக்கபட்ட பகுதிகளில் பயிறு வகைகள் மற்றும் காய்கறிகளை பயிரிட்டு வருமானத்தை பெருக்கலாம் .  


Next Story

மேலும் செய்திகள்