மதுரை ஆசிரியை உலக சாதனை முயற்சி : 40 மணி நேரமாக தொடர்ந்து பாடம் நடத்துகிறார்

உலக சாதனைக்காக 40 மணி நேரம் தொடர்ந்து பாடம் நடத்தி வருகிறார் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுலைகா பானு.
x
உலக சாதனைக்காக, 40 மணி நேரம் தொடர்ந்து பாடம் நடத்தி வருகிறார் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுலைகா பானு. மதுரை காளவாசல் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் அவர், பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளியில், நேற்று காலை 9 மணிக்கு, இந்த சாதனை முயற்சியை தொடங்கினார். 27 ஆண்டுகளாக ஆசிரியை பணியில் இருக்கும் சுலைகா பானு மாணவர்களுக்கு பிடித்த வகையில், 40 மணி நேரமாக பாடல்கள், ஆட்டம், நாடகம், தனி நடிப்பு போன்ற வகுப்புகளை நடத்தி வருகிறார். இவரின் உலக சாதனையை பதிவு செய்வதற்காக, 'சாம்பியன் உலக சாதனை' நிறுவனத்தில் இருந்து நடுவர்கள் வந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்