லாரியை நிறுத்த முயன்றவர் மீது லாரி ஏற்றி கொலை : வட மாநில ஓட்டுநர் கைது

காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்த முயன்றவர் மீது லாரி ஏற்றி கொலை செய்த வட மாநில ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
லாரியை நிறுத்த முயன்றவர் மீது லாரி ஏற்றி கொலை : வட மாநில ஓட்டுநர் கைது
x
காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்த முயன்றவர் மீது லாரி ஏற்றி கொலை செய்த வட மாநில ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் அடுத்த துலங்கந்தண்டலம் கிராமத்தை சேர்ந்த கங்கன் என்பவர் அவ்வழியாக சென்ற ஒரு லாரியை நிறுத்துமாறு கூறி லாரியின் குறுக்கே நின்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த லாரியின் ஓட்டுநர் தாரஞ்சித் சஹானி, கங்கன் மீது லாரியை ஏற்றி கொலை செய்து விட்டு தலைமறைவானார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார், தலைமறைவாக இருந்த வட மாநில ஓட்டுநரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்