திண்டுக்கல்: சாலையில் நாற்று நட்டு வினோத போராட்டம்...

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கவுண்டம்பட்டி கிராம சாலை, மழையில் சிதைந்து சகதிக்காடாய் மாறி உள்ளது.
திண்டுக்கல்: சாலையில் நாற்று நட்டு வினோத போராட்டம்...
x
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கவுண்டம்பட்டி கிராம சாலை, மழையில் சிதைந்து சகதிக்காடாய் மாறி உள்ளது. அந்த சாலையில் கிராம மக்கள் நாற்று நட்டு வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர். 40 ஆண்டுகளாக இங்கு குடிநீர், சாக்கடை வசதி, சாலை வசதி போன்ற அடிப்படை தேவைகள் கூட முறையாக கிடைக்கவில்லை என்பது கிராம மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.  தற்போது பெய்துவரும் மழையால், சாலை கால் புதையும் அளவிற்கு சகதியாக மாறியதால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், ஊராட்சி ஒன்றியத்தின் கவனத்தை ஈர்க்க இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்