10 அடி நீள மலைப்பாம்பை பிடித்து பள்ளி மாணவர்கள் துணிச்சல்
புதுக்கோட்டை அன்னவாசல் பகுதியில் பத்து அடி நீளமுள்ள மலைப்பாம்பை பள்ளி மாணவர்கள் துணிச்சலோடு பிடித்துள்ளனர்.
புதுக்கோட்டை அன்னவாசல் பகுதியில் பத்து அடி நீளமுள்ள மலைப்பாம்பை பள்ளி மாணவர்கள் துணிச்சலோடு பிடித்துள்ளனர். குளவன்பட்டி கிராமத்தில் சத்யராஜ் என்பவர் வீட்டில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பை அந்த வழியாக பள்ளி சென்ற மாணவர்கள் பார்த்தனர். உடனே அந்த பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் மாணவர்களின் துணிச்சலை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Next Story