கத்தியை காட்டி மிரட்டி வடமாநில இளைஞரிடம் வழிப்பறி : 2 பேர் கைது
சென்னையை அடுத்த ஓட்டேரியில் வடமாநிலத்தை சேர்ந்த அதிராமல்லி என்பவர் வசித்து வருகிறார்.
சென்னையை அடுத்த ஓட்டேரியில் வடமாநிலத்தை சேர்ந்த அதிராமல்லி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 25 ஆம் தேதி சின்னதம்பி தெருவில் வேலையை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, ஆட்டோவில் வந்த 3 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்து செல்போன் மற்றும் 500 ரூபாயை பறித்து சென்றனர். இதுதொடர்பாக அதிமராமல்லி அளித்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை வைத்து புரசைவாக்கத்தை சேர்ந்த இருதயராஜன், ஜான்சன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Next Story