புதுக்கோட்டை மாவட்டத்தில் அணைக்கட்டு மதகுகள் சேதம் - உடனடியாக சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டில் மதகுகள் பழுதடைந்துள்ளதால் தண்ணீர் வீணாக வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அணைக்கட்டு மதகுகள் சேதம் - உடனடியாக சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை
x
கஜா புயலால் தண்ணீர் வரத்து அதிகரித்து 12 ஆண்டுகளுக்கு பிறகு அணைக்கட்டில் நீர் நிரம்பி உள்ளது. இருப்பினும் அணைக்கட்டில் உள்ள பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அணைக்கட்டில் உள்ள மதகுகள் பழுதடைந்ததுள்ளதால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். உடனடியாக மதகுகளை சரிசெய்து, தண்ணீரை சேமித்து வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்த ஏதுவாக இருக்க கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்