எண்ணூர் துறைமுகத்தில் அணிவகுத்து நிற்கும் கப்பல்கள் : எரிவாயு தட்டுப்பாடு அபாயம்?

கோரல் ஸ்டார் என்ற கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு எண்ணெய் இறங்குதளத்தில் நிற்பதால், எரிவாயு, மற்றும் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எண்ணூர் துறைமுகத்தில் அணிவகுத்து நிற்கும் கப்பல்கள் : எரிவாயு தட்டுப்பாடு அபாயம்?
x
சென்னைக்கு வரவேண்டிய ஒன்றரை லட்சம் டன், சமையல் எரிவாயு, கச்சா எண்ணெய், டீசல் உள்ளிட்டவற்றை ஏற்றி வந்த 7 கப்பல்கள், கடந்த 5 நாட்களாக எண்ணூர் துறைமுகத்திற்கு வெளியே அணிவகுத்து நிற்கின்றன. எண்ணூர் துறைமுகத்தில் உள்ள ஒரே ஒரு எண்ணெய் இறங்குதளத்திலும், கோரல் ஸ்டார் கப்பல் எண்ணெய் கசிவு ஏற்பட்டு நிற்பதால், மற்ற கப்பல்கள் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னைக்கு வரவேண்டிய 5 ஆயிரம் டன் சமையல் எரிவாயு, 55 ஆயிரம் டன் டீசல், 23 ஆயிரம் டன் விமான எரிபொருள் 35 ஆயிரம் டன் கச்சா எண்ணைய் மூலப்பொருட்கள் ஆகியவை தேக்கம் அடைந்துள்ளன. இதன்காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்