சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நிலைகொண்டுள்ளதால், மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாக மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
x
வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நிலைகொண்டுள்ளதால், மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாக மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தெற்கு ஆந்திரம், கடலோர தமிழ்நாடு மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை மாவட்ட அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்