புதுக்கோட்டை : 'கஜா' புயலால் நர்சரி கார்டன் தொழில் பாதிப்பு

புதுக்கோட்டையில் கஜா புயல் தாக்கத்தால் நர்சரி கார்டன் தொழிலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை : கஜா புயலால் நர்சரி கார்டன் தொழில் பாதிப்பு
x
புதுக்கோட்டை மாவட்டம்  கல்லுகுடியிருப்பு கிராமத்தில் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நர்சரி கார்டன் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இங்கு வளர்க்கப்படும் அலங்கார செடிகள், மலர் செடிகள் மற்றும் தேக்கு, தென்னை, பலா மரக்கன்றுகள் இந்தியா முழுவதும் அனுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில், கஜா புயல் காரணமாக, கல்லுகுடியிருப்பு கிராமமே உருக்குலைந்து போய் விட்டது. மழை நீரினாலும் மரங்கள் விழுந்ததாலும் செடிகள் முற்றிலுமாக சேதமடைந்து விட்டன. ஒவ்வொரு நர்சரி கார்டனிலும் தலா இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான மரக்கன்றுகள் மற்றும் செடிகள் சேதமடைந்துள்ளதாக இந்த கிராம மக்கள் வேதனையடைந்துள்ளனர். பழைய நிலைமை திரும்ப இன்னும் 6 மாதமாகும் எனவும் அதிகாரிகள் யாரும் தங்களை வந்து பார்க்க வரவில்லை எனவும் அவர்கள் கவலையுடன் கூறுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்