70 அடி கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு
ஓமலூர் அருகே 70 அடி கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர்.
ஓமலூர் அருகே 70 அடி கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். பெரமச்சூர் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவரது பசுமாடு ,மேய்ச்சலின் போது 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி பசுவை கயிற்றால் கட்டி மீட்டனர். மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
Next Story