நந்திஸ் - சுவாதி ஆணவப்படுகொலை : 3 பேர் கைது

நந்திஸ் சுவாதி ஆணவப்படுகொலை சம்பவத்தில் தலைமறைவாக இருந்த 3 பேரை போசார் கைது செய்தனர்.
நந்திஸ் - சுவாதி ஆணவப்படுகொலை : 3 பேர் கைது
x
ஒசூர் அருகே சூடகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நந்தீஸ் - சுவாதி ஆகியோர் கலப்பு திருமணம் செய்து கொண்டதற்காக சுவாதியின் தந்தை மற்றும் உறவினர்களால் ஆணவப்படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலையில் சுவாதியின் தந்தை ஸ்ரீனிவாசன், அவரது உறவினர்கள் வெங்கடேசன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய அஸ்வத், வெங்கட்ராஜ், லெட்சுமணன் ஆகிய 3 பேரை கர்நாடகா மாநில போலீஸார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்