பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த வழக்கு
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த துத்திக்குளத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்த வழக்கில், 5 பேருக்கு10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மாணவியை கடத்தி திருமணம் செய்த மோகன்தாஸ் மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பெற்றோர் உறவினர்கள் என 4 பேருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபாராதமும், கடைசி குற்றவாளியான சித்ரா என்பவருக்கு 3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மகிளா நீதிமன்ற நீதிபதி இளங்கோ அளித்த தீர்ப்பை தொடர்ந்து, அவர்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story