உயிர் மட்டுமே மிச்சம் உள்ளதாக தலைஞாயிறு கிராம குடிசைவாசிகள் கதறல்

தங்களிடம் உயிர் மட்டுமே மிச்சம் இருப்பதாக கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
x
கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு கிராமம். அந்த கிராமத்தில் உள்ள அனைத்து குடிசை வீடுகளும்  முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. ஓட்டு வீடுகளின் மொத்த ஓடுகளும் இருந்த இடம் தெரியாமல் காற்றில் பறந்து சென்றதால், மழை மற்றும் வெயிலுக்கு ஒதுங்க கூட இடம் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். 

அனைத்து உடமைகளையும் இழந்து தனிமரமாக நிற்கும் குடிசைவாசிகள், தங்களிடம் உயிரை தவிர வேறு எதுவும் இல்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர். குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு தேவையான பால், குடிநீர் ஆகியவற்றை மட்டும் கொடுத்தாலே போதும் என்று சொல்லும் பொதுமக்கள், புயலுக்கு பிறகு ஆறுதல் சொல்லக்கூட யாரும் வரவில்லை என கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்