சென்னையில் 1 லட்ச ரூபாய்க்கு மாத வட்டியாக 2 தங்க காசு கொடுப்பதாக மோசடி

சென்னையில் ஒரு லட்ச ரூபாய்க்கு மாத வட்டியாக 2 கிராம் தங்கக்காசு கொடுப்பதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி..
x
சென்னை சவுகார்பேட்டையில் அடகுக்கடை நடத்தி வரும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் கேன்ஜெண்ட் பண்டாரி, ஒரு லட்சம் ரூபாய் பணத்திற்கு மாத வட்டியாக 2 கிராம் தங்க காசு கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதை அறிந்து பலர் லட்சக்கணக்கில் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளனர்.  நான்கு மாதங்களாக தங்க காசு வழங்காமல் காலம் தாழ்த்தியதால் பணத்தை திருப்பி கேட்டவர்களுக்கு, பணம் கொடுக்கும் வரை தங்க கட்டிகளை வைத்துக்கொள்ளுமாறு  கொடுத்துள்ளார். சந்தேமடைந்த சிலர் தங்கத்தை சோதனை செய்ததில் அவை போலி என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். விசாரணையில் 6 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.இதனையடுத்து பண்டாரியை கைது செய்த போலீசார்,  காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்