புயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஆய்வு : உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம்
தமிழகத்தை புரட்டி போட்ட கஜா புயலில் உருக்குலைந்த தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார்.
* தமிழகத்தை புரட்டி போட்ட கஜா புயலில் உருக்குலைந்த தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார். ஹெலிகாப்டரில் பறந்து, சேத பகுதிகளை பார்வையிட்ட எடப்பாடி பழனிச்சாமி, பின்னர், பட்டுக்கோட்டையில் ஏக்கர் கணக்கில் சேதம் அடைந்த தென்னை மரங்களை ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிள்ளையார்குப்பம் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறினார்.
* உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிய எடப்பாடி பழனிச்சாமி, முற்றிலும் வீடு இழந்தோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தபோது, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.
Next Story