உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதி பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக புகழேந்தி பதவியேற்றார்.
உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதி பதவியேற்பு
x
அவருக்கு தலைமை நீதிபதி தஹில் ரமானி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் வரவேற்றார். கூடுதல் நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  உயர் நீதிமன்ற  மதுரை கிளையில் கூடுதல் வழக்கறிஞராக புகழேந்தி பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் சேர்த்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்