கஜா புயல் - நிவாரணம் வழங்க முதலமைச்சர் வேண்டுகோள்

'கஜா' புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குபொது மக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் உதவ முன்வருமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கஜா புயல் - நிவாரணம் வழங்க முதலமைச்சர் வேண்டுகோள்
x
காசோலை மற்றும் வரைவோலைகளை  முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கும், ஆன்லைன் மூலமாக செலுத்த விரும்புபவர்கள், தலைமை செயலக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையின்  117 201 000 000 070 என்ற பிரத்யேக கணக்கு எண்ணுக்கும் அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆன்லைன் மூலம் நிதி அனுப்புபவர்களுக்கு, பணத்தை பெற்றுக் கொண்டதற்கான பற்றுச் சீட்டை அனுப்ப, பணம் செலுத்துபவர்கள் தங்களது பெயர், செலுத்தும் தொகை, வங்கி, கிளை, செலுத்தப்பட்ட தேதி, நிதி அனுப்பியதற்கான எண், முகவரி மற்றும் ஈ-மெயில் விவரங்களை தெரிவிக்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கேட்டுக் கொண்டு உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்