"கஜா புயல் நிவாரண நிதிக்கு நிதி செலுத்துவதில் சிக்கல்" - வெளிநாடு வாழ் இந்தியர்கள்
கஜா புயல் பாதிப்பிற்காக தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கக் கூடிய ஆன்லைன் எளிமையானதாக இல்லை என வெளிநாடு வாழ் இந்தியர்கள் தெரிவித்து உள்ளனர்.
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது, நிவாரணத் தொகை பெற பிரத்யேகமாக ஆன்லைன் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாகவும், அதில் ஒரு வெளிப்படைத்தன்மை இருந்ததகாவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நிவாரணத் தொகை எந்த வங்கியின் மூலம் செலுத்தப்படுகிறது, மாவட்ட வாரியாக எவ்வளவு பணம் சேகரிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் கேரள அரசின் இணையதளத்தில் இருந்ததாகவும், ஆனால் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு ஆன்லைன் மூலம் நிவாரண நிதி செலுத்துவது அவ்வளவு எளிமையாக இல்லை என்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story