ஆள்மாறாட்டம் செய்து வங்கிகளில் மோசடி - ஒருவரை கைது செய்தது மத்திய குற்றப்பிரிவு

ஆள்மாறாட்டம் செய்து வங்கிகளில் மோசடி செய்த நபரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னையில் கைது செய்தனர்.
ஆள்மாறாட்டம் செய்து வங்கிகளில் மோசடி - ஒருவரை கைது செய்தது மத்திய குற்றப்பிரிவு
x
நெல்லையை சேர்ந்த தொழிலதிபர் ஜெபரத்தினம், மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ஆள்மாறாட்டம் செய்து, தனது பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து சென்னை கொடுங்கையூரை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர், வங்கிகளில் ஒரு கோடியே 86 லட்ச ரூபாய் கடன் பெற்று, மோசடி செய்திருப்பதாகவும், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். புகாரின் அடிப்படையில் கமலக்கண்ணனை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்