ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பிரசவம்
தாராபுரத்தில் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு நடந்த பிரசவத்தில் அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது.
பழனி அருகே கோழிப்பண்ணை ஒன்றில் வேலை செய்வதற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆலமியான் என்பவர் மனைவி ராபினாவுடன் பேருந்தில் வந்துள்ளனர். ஈரோடிலிருந்து பழனி செல்லும் பேருந்தில், தாராபுரம் அருகே வந்த போது நிறைமாத கர்பிணியான ராபீனாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால், பேருந்து ஓட்டுனர், பேருந்தை இடையில் நிறுத்தாமல் தாராபுரம் நோக்கி வேகமாக ஓட்டிவந்தார். ஆனால் அதற்குள் அந்தபெண்ணுக்கு பேருந்திலேயே அழகான ஆண்குழந்தை பிறந்தது. தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும், குழந்தையும் தற்போது நலமாக உள்ளனர்.
Next Story