திருவாரூர் மாவட்டத்திற்கு 40 மருத்துவ குழுக்கள் - அமைச்சர் காமராஜ் தகவல்
துணை சுகாதார அலுவலகத்திலிருந்து திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 40 மருத்துவ குழுக்களை அமைச்சர் காமராஜ் அனுப்பி வைத்தார்.
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் திருவாரூர் மாவட்டத்தில் முத்துபேட்டை பகுதி புயலால் அதிகம் பாதிப்புள்ளாகியுள்ளது என தெரிவித்தார். 205 மையங்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் பல்வேறு துறைகளை சார்ந்த 6 ஆயிரத்து 400-க்கு மேற்பட்டோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
Next Story