விரைவு ரயில் எஞ்சினில் தீ விபத்து - பயணிகள் பீதி

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற சப்தகிரி விரைவு ரயில் எஞ்சினில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பயணிகள் பீதி அடைந்தனர்.
விரைவு ரயில் எஞ்சினில் தீ விபத்து - பயணிகள் பீதி
x
சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற சப்தகிரி விரைவு ரயில் எஞ்சினில் ஏற்பட்ட  தீ விபத்து காரணமாக பயணிகள் பீதி அடைந்தனர். 1500க்கும் மேற்பட்ட பயணிகளுடன் காலை 6.25மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் எஞ்சின் பின் பகுதியில் புகையுடன் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து நெமிலிச்சேரி ரயில் நிலையம் இடையே ரயில் நிறுத்தப்பட்டவுடன், பீதியடைந்த பயணிகள் ரயிலில் இருந்து உடனடியாக வெளியேறினர்.  தொழில்நுட்ப வல்லுநர்கள் 2 மணி நேரம் போராடியும் தீயை அணைக்க முடியாததால்,  ஆவடியில் இருந்து  தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு பணி நடைபெற்று வருகிறது.  


Next Story

மேலும் செய்திகள்