வரும் 18, 19 ஆம் தேதி கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்
கஜா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளது
கஜா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து திண்டுக்கல் அருகே மையம் கொண்டிருப்பதால் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் 18, 19 ஆம் தேதி கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்
மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லலாம் என அறிவித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் புதிய காற்றழுத்த நிலை உருவாக வாய்ப்பு உள்ளதால் வரும் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும்தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார். மேலும், கடந்த ஒன்றாம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை பெய்த வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 6 சதவீதம் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story