கஜா புயல் எதிரொலி : செங்கல்பட்டு பகுதிகளில் கனமழை
கஜா புயல் இன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் செங்கல்பட்டு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கூடுவாஞ்சேரி, திருக்கழுக்குன்றம், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் மேகமூட்டமாக இருந்து வந்தது. இதன் தொடர்ச்சியாக, காலை 10 மணிக்கு மேல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
Next Story