பேருந்து - கார் நேருக்கு நேர் மோதல்... - 5 பேர் உடல் நசுங்கி பலி

மாமல்லபுரம் அருகே, பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஐந்து பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
பேருந்து - கார் நேருக்கு நேர் மோதல்... - 5 பேர் உடல் நசுங்கி பலி
x
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அருகேயுள்ள கடம்பாடி என்ற பகுதியில், சென்னையில் இருந்து கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது, சென்னையை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று மோதியது. இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது. காரில் பயணம் செய்த சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த  கார்த்திக், பெரம்பூரை சேர்ந்த  சதிஷ், பட்டுக்கோட்டையை சோந்த முகமது தகீம்  உள்ளிட்ட 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அவர்கள் 5 பேரில், இரண்டு பேரின் அடையாளம் தெரியவில்லை.

Next Story

மேலும் செய்திகள்