"கஜா- ராமநாதபுரத்தில் முன்னேற்பாடுகள் தயார்"- ஆட்சியர்

"கஜா" புயல் நாளை கரையைக் கடக்க உள்ள நிலையில் கடலோர காவல்படை முகாமுக்கு ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ் வந்தார்.
கஜா- ராமநாதபுரத்தில் முன்னேற்பாடுகள் தயார்- ஆட்சியர்
x
புயலை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாவட்டம் முழுவதும் புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், தனுஷ்கோடி பகுதிக்கு இன்று மாலை முதல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். காற்றின் வேகத்தை பொறுத்து பாம்பன் பாலத்தில் வாகனங்களை அனுமதிப்பது குறித்து பின்னர் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்