"எனக்கு அளவுக்கு அதிகமான புகழ் கிடைத்துவிட்டது" - கமல்ஹாசன்
தமிழக மக்கள் தனக்கு அளவுக்கு அதிகமான புகழைக் கொடுத்துள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள், தனக்கு அளவுக்கு அதிகமான புகழைக் கொடுத்துள்ளதாகவும், தற்போது தமிழகத்திற்கு புகழ் சேர்க்கும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுகள் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன், இவ்வாறு தெரிவித்தார்.
Next Story