ஜெயலலிதாவின் சிலையை வடிவமைக்க கிடைத்த வாய்ப்பு ஓர் பெரும் பாக்கியம் - சிற்பி ராஜ்குமார்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை வடிவமைக்க கிடைத்த வாய்ப்பை பாக்கியமாக கருதுவதாக சிற்பி ராஜ்குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் சிலையை வடிவமைக்க கிடைத்த வாய்ப்பு ஓர் பெரும் பாக்கியம் - சிற்பி ராஜ்குமார்
x
ஜெயலலிதா சிலையை வடிவமைத்தால் மிகுந்த மகிழ்ச்சி. இதற்கு முன்பு செய்த சிலை சரியாக இல்லை என கூறப்பட்டது. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மூலமாக முதலமைச்சர் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அதன்படி 55 ஆண்டுகாலம் ஜெயலலிதா எப்படி இருந்தாரோ அதைப்போலவே சிலை செய்யப்பட்டது. தமிழக மக்கள் இந்த சிலையை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சிலை செய்ய வாய்ப்பளித்ததை பெரும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். ஜெயலலிதாவை போலவே சிலை இருப்பதாக பாராட்டுகின்றனர். இதேபோல் சேலத்திற்கு ஒரு சிலை வடிவமைக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்