இடிந்து விழும் நிலையில் அரசு குடியிருப்பு வீடுகள்
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் 20 அரசு குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.
குடியிருப்பு வீடுகள் சுமார் 25 ஆண்டுகள் முன்பு கட்டப்பட்டவை. தற்போது வீடுகள் அனைத்திலும் மேல்தளங்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் கிராம மக்கள் மரண பயத்தில் வசித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் பல முறை தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Next Story