கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி

அருப்புக்கோட்டை அருகே கணவன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி
x
அருப்புக்கோட்டை அருகே உள்ள மாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன். விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், 4 பெண் குழந்தைகளும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், வீரபத்திரன் தலையில் அம்மிக் கல்லை போட்டு மனைவி மகாலட்சுமி கொலை செய்துள்ளார். கொலையை  மறைப்பதற்காக கணவனின் உடலை தீயிட்டு கொளுத்தவும் மகாலட்சுமி முயற்சி செய்துள்ளார். 

தகவலறிந்து விரைந்த மல்லாங்கிணறு போலீசார், வீரபத்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக மனைவி மகாலட்சுமியை கைது செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்