வன்கொடுமை கண்டித்து 3000 பேர் பேரணி : கடும் தண்டனை கொடுக்க வலியுறுத்தல்

தஞ்சை மாவட்டம், திருபுவனத்தில், 21 வயது இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து, 3 ஆயிரம் பேர் பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.
வன்கொடுமை கண்டித்து 3000 பேர் பேரணி : கடும் தண்டனை கொடுக்க வலியுறுத்தல்
x
தஞ்சை மாவட்டம், திருபுவனத்தில், 21 வயது இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து, 3 ஆயிரம் பேர் பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.  திருபுவனத்தில் வீட்டிற்கு வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 21 வயது இளம் பெண்ணுக்கு பாலியல் துன்பம் அளித்த, பட்டுப்புடவை வியாபாரியை கைது செய்துள்ள நிலையில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கடையடைப்பு மற்றும் பேரணி நடைபெற்றது. கைது செய்யப்பட்ட சின்னப்பாவிற்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என பேரணியில் வலியுறுத்தப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்