சென்னையை கலக்கிய முகமூடி கொள்ளையர்கள் கைது

சென்னை புறநகர் பகுதிகளான ஆதம்பாக்கம் மடிப்பாக்கம் பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்து வந்த முகமூடி கொள்ளையர்கள் பிடிபட்டனர்.
சென்னையை கலக்கிய முகமூடி கொள்ளையர்கள் கைது
x
ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளர் முரளி தலைமையிலான தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது நங்கநல்லுார் தில்லைகங்கா நகர் பகுதியில் சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் தான் முகமூடி கொள்ளையர்கள் என்பதும் கேளம்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் விருகம்பாக்கத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 61 பவுன் தங்க நகைகள் பயங்கர ஆயுதங்கள் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய முகமூடி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்