மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை

கடலூர் மத்திய சிறையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை
x
சென்னை புழல் சிறையில் கைதிகள் டி.வி. மெத்தை, செல்போன் வசதியுடன் சிறப்பு உணவு தயாரித்து சாப்பிட்டு சொகுசு வாழ்க்கை நடத்தியது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சிறைகளில் அதிகாரிகள் திடீர் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் கடலூர் மத்திய சிறையில் இன்று காலை 6 மணி 20 நிமிடத்துக்கு தொடங்கிய போலீசாரின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சிறையில் 3 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்