நெல்லை கோவிலில் அரிய வகை 'திமிரி நாதஸ்வரம்'

மிகவும் பழமையான திமிரி வகை நாதஸ்வரம் நெல்லையில் உள்ள சாலைக்குமார சாமி கோவிலில் வாசிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை கோவிலில் அரிய வகை திமிரி நாதஸ்வரம்
x
நெல்லை சந்திப்பில் அமைந்துள்ள இந்த கோவிலில், சஷ்டி மற்றும் வைகாசி விசாக திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சஷ்டி விழாவில், சுவாமி உலாவின்போது, 12 துளைகள் கொண்ட திமிரி நாதஸ்வரம் வாசிக்கப்படுகிறது. வழக்கமாக வாசிக்கப்படும் 'பாரி' வகை நாதஸ்வரம் 2 கட்டை கொண்டது. ஆனால், திமிரி நாதஸ்வரம், 5 கட்டையில் வாசிக்கக் கூடியது. நாதஸ்வர வகைகளின் முன்னோடியான திமிரி நாதஸ்வரத்தை, சாலைக்குமார சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்