ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி
x
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சிவானந்தன் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிவானந்தனின் மனைவி கோகிலா, சுய உதவிக்குழுக்களில் கடன் வாங்கி அதனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்