தீர்ப்பின் எதிரொலி - மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகள்

சிவகாசியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக பட்டாசு தொழிற்சாலைகளை திறக்க முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்து வருகின்றனர்.
தீர்ப்பின் எதிரொலி - மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகள்
x
சரவெடி தயாரிப்புக்கு தடை பட்டாசு தயாரிக்க தேவையானமுக்கிய மூலப் பொருட்கள் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது, பண்டிகை காலங்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் அடுத்தடுத்த தீர்ப்புகளால், விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன. பண்டிகைகளின் போது சுதந்திரமாக பட்டாசு வெடிப்பதையும் தடை செய்துள்ள  உச்ச நீதிமன்றத்தின் மீது பொதுமக்கள் அதிருப்தியில் இருந்து வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு  தீர்வு காண வேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்