பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவான சாமியார் : 2 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் தேடுதல்வேட்டை

சென்னையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக உள்ள சதுர்வேதி சாமியாரை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளார்.
பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவான சாமியார் : 2 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் தேடுதல்வேட்டை
x
கடந்த 2004ஆம் ஆண்டு சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி, மகளை கடத்தில் இருவரையும் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கைதான சதுர்வேதி சாமியார் சில தினங்களில் ஜாமினில் வெளியே வந்து தலைமறைவாக உள்ளார். இதனிடையே, வாரணாசி உள்ளிட்ட பல இடங்களில் சாமியார் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து, 2 ஆண்டுகளுக்கு பிறகு சதுர்வேதி சாமியாரை தேடும் பணியில் மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  இதற்கான தனிப்படை, வடமாநிலத்திற்கு விரைந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்