அமெரிக்காவில் பணியாற்றிய தமிழர் சாலை விபத்தில் பலி : தனியார் காப்பீடு நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

சாலை விபத்தில் பலியான அமெரிக்க பொறியாளர் குடும்பத்துக்கு தனியார் காப்பீடு நிறுவனம் சுமார் இரண்டரை கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் பணியாற்றிய தமிழர் சாலை விபத்தில் பலி : தனியார் காப்பீடு நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு
x
அமெரிக்காவில் மென் பொறியாளராக பணியாற்றி வந்த தாராபுரத்தைச் சேர்ந்த குமார் என்பவர், 2010ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் பலியானார். அவரது மரணத்திற்கு 3 கோடியே 60 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தாராபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் காப்பீடு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, இழப்பீடு தொகையாக 2 கோடியே 59 லட்சம் ரூபாயை 6 வாரங்களில் டெபாசிட் செய்ய காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இந்நிலையில் குமாரின் பெற்றோர் இறந்து விட்டதாலும், குமாரை சார்ந்து இல்லாத அவரது சகோதரர்களுக்கு இழப்பீட்டில் பங்கு பெறுவதற்கு உரிமையில்லை என்ற்ம் நீதிபதிகள் தெளிவுப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்