விஜய்யின் சர்கார் பட விவகாரம் - அதிமுக அலுவலகத்தில் போலீசார் குவிப்பு
சர்கார் பட விவகாரத்தை தொடர்ந்து சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாநகர காவல்துறை இணை ஆணையர் அன்பு மற்றும் துணை ஆணையர் மயில்வாகனன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சர்கார் திரைப்படத்தில் அதிமுகவை விமர்சித்து இருக்கும் காட்சிகளை நீக்கும் படி தமிழகத்தின் பல திரையரங்குகளிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில்,அதிமுக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Next Story