தினத்தந்தி சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ மாணவிகளுக்கு தினத்தந்தி நாளிதழ் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தினத்தந்தி சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
x
ஆண்டு தோறும் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ மாணவிகளுக்கு தினத்தந்தி நாளிதழ் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

அதன்படி பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 10 பேருக்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. உதவித் தொகையை கன்னியாகுமரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் ராகுல்நாத் வழங்கினார்.

தினத்தந்தி நாளிதழ் கொடுத்துள்ள உதவித்தொகை மேற்படிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்