துலா உற்சவம் - காவிரியில் அமாவாசை தீர்த்தவாரி

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு காவிரியில் அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது.
துலா உற்சவம் - காவிரியில் அமாவாசை தீர்த்தவாரி
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு காவிரியில் அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது. ஐப்பசி மாதம் காவிரி, கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வதாக ஐதீகம். இதற்காக மயிலாடுதுறையில் பாடல் பெற்ற சிவாலயங்களில் இருந்து சுவாமி, அம்பாள் புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி வழங்குவது வழக்கம். அதன்படி, இன்று சுவாமி அம்பாளுடன் காவிரிக் கரையில் எழுந்தருளினார். பின்னர் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.                                                                                     


Next Story

மேலும் செய்திகள்