அரசு பள்ளியில் தரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்

சேலம் மாவட்டம் கொங்குபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதிய இருக்கைகள் இல்லாததால் மாணவர்கள் தரையில் அமர்ந்து படித்து வருவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசு பள்ளியில் தரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்
x
சேலம் மாவட்டம் கொங்குபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதிய இருக்கைகள் இல்லாததால்  மாணவர்கள் தரையில் அமர்ந்து படித்து வருவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பள்ளியில்  பயிலும் கொங்குபட்டி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 350 மாணவர்கள், தனியார் பள்ளிக்கு நிகராக கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.  அரசு வழங்கியுள்ள நாற்காலி மற்றும் மேஜைகளை பள்ளி நிர்வாகம் பயன்படுத்த வேண்டும் என்றும், அரசும் தேவைப்படும் கூடுதல் நாற்காலி,  மேஜைகளை வழங்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்