வேலை வாங்கி தருவதாக 30க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் ரூ.1 கோடி மோசடி

தனியார் நிறுவனம் ஒன்று, வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துவிட்டதாக, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார்
வேலை வாங்கி தருவதாக 30க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் ரூ.1 கோடி மோசடி
x
வேலை வாங்கி தருவதாக கூறி, தனியார் நிறுவனம் ஒன்று, ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துவிட்டதாக,  பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் ஆதார் எண் திருத்தம் செய்யவும், புதிதாக வழங்கவும், உரிமங்கள் பெற்று தருவதாக கூறி இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர். இது தொடர்பாக நிறுவனத்தின் உரிமையாளர்கள் ரெங்கநாத கண்ணன், முத்துக்குமாரன், ராஜா, பாரத், ந‌ந்தினி ஆகிய 5 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்